பொறுமையை விட உயர்ந்த தவம் என்று ஒன்று இல்லை. கருணையை விட பெரிய அறச்செயல் ஒன்றும் இல்லை. திருப்தி என்பதற்கு மேலான இன்பம் எதுவும் இல்லை. அதுபோல் மன்னிப்பதை விட பெரிய ஆயுதம் எதுவும் இல்லை.
இந்தக் கருத்து மிகவும் எளிய கருத்தாகத் தோன்றலாம். ஆனால் அவரவர் அனுபவத்தைக் கொண்டு தம் மனதில் ஆழ்ந்து சிந்திக்கும் போதுதான் இதன் சிறப்பு புரியும்.
இதையே இந்த வெண்பா எடுத்துரைக்கிறது
இல்லை பொறுமையி னும்உயர்ந்த தோர்தவம்
இல்லை கருணை யுயர்அறம் – இல்லை
திருப்தியி னில்உயர்ந்த இன்பம்மன் னிப்பின்
பெருத்ததோர் ஆயுதம் இல்லை
பின்னூட்டமொன்றை இடுக