தளம் பற்றி

இந்த வலைப்பூ பற்றி….

இந்த உலகம் ஒரு அற்புத சுரங்கம். இந்த உலகத்தில் இயற்கை, எல்லாவற்றையுமே அபரிமிதமாகவே வைத்துள்ளது. நாம் காணும் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், வானம், பூமி, மலைகள், நதிகள், கடல்கள், மற்றுமுள்ள எல்லாமே அதிசயம்தான். எல்லாவற்றையும் ரசியுங்கள். மகிழுங்கள். இந்த வலைப்பூ உங்கள் ரசிப்புத்தன்மைக்கு ஒரு விருந்து. பிடித்தால் மற்றவர்களுக்கும் அறிமுகப் படுத்துங்கள்.

என்னைப் பற்றி….

பெயர் பழனிச்சாமி. படிப்பதிலும், எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சுஜாதாவின் எழுத்துக்கள் பிடிக்கும். இசையை ரசிப்பது என்னோடு இரண்டற கலந்த ஒன்று.

ஆரோக்கியத்தில் ஆர்வம் உண்டு. தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலை கழகத்தில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பற்றிய பாடம் படித்து தேர்ச்சி பெற்றதுண்டு. இரசாயணக் கலப்பில்லாத துணை உணவுகளின் மூலம் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கை உண்டு.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு – அருந்தியது

அற்றது போற்றி உணின்.

சரிவிகித உணவு நமக்கு கிடைத்து , அது சரியான வகையில் உடம்பில் ஜீரணமாகி தேவையற்ற கழிவுகள் வெளியேறி விட்டால் பிறகு உடம்புக்கு நோய் வருவதற்கான வாய்ப்பில்லை என்னும் திருவள்ளுவப் பெருந்தகையின் வாக்கில் நம்பிக்கை உண்டு.

சித்தர்களைப் பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வமுண்டு.

எனக்குத் தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்கு எடுத்துரைத்து அதனால் ஒரு சிலர் பலனடைந்தால் அது எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும். அதற்காகவே இந்த வலைப்பூ.

உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள். அது என்னை ஊக்குவிக்கும்.

பின்னூட்டமொன்றை இடுக