தனக்கு குழந்தையில்லை என்பதால் தன்னுடைய அக்கா மகளைத் தன் பெண்ணாக நினைக்கிறாள் இறைச் சிந்தனையில் இருக்கும் ஒரு பெண். பந்த பாசங்கள் இன்னும் பாக்கி இருப்பதால் இன்னும் சித்தி அடையவில்லை என்று கருதுகிறாள்.
இந்த நிலையில் அக்கா பெண்ணுக்கு பதினாறாவது பிறந்த நாள் வருகிறது. அதற்கு வாழ்த்துச் சொல்ல வேண்டும். தன்னுடைய வேண்டுதலைத்தான் இறைவன் நிறைவேற்ற வில்லை. ஆனால் மகளுக்கு எல்லாம் கிடைத்து பல்லாண்டு வாழ வேண்டும். அவள் வேண்டிய கோரிக்கைகளை எல்லாம் இறைவன் நிறைவேற்றட்டும் என்று வாழ்த்தி, அதை வெண்பாவாய் வடிக்கிறாள்.
வேண்டிய கோரிக்கைகளை சித்திபெற (நிறைவேற்றி) வைப்பவர் என்றும் நல்ல புத்தியைக் கொடுப்பவர் என்றும் கருதப்படுவதால் சித்தி புத்தி விநாயகர் என்று பெயர் பெற்ற விநாயகரின் நல்லாசி பெற்று நீடூழி வாழ்க என்று வாழ்த்துகிறாள்.
இதோ அந்த வெண்பா
சித்திபெறா புத்தியால் பந்தமான சித்திபெறா
புத்திரிக்கு ஈரெட்டாம் ஆண்டுஇது – சித்திபுத்தி
நாயகனின் ஆசியுடன் பல்லாண்டு நீவாழ
தாயன்பால் வாழ்த்துகின் றேன்