மந்திரம் – 23
वर्षन्तु ते विभावरि दिवो अभ्रस्य विद्युतः ।
रोहन्तु सर्वबीजान्यव ब्रह्म द्विषो जहि ॥२३॥
வர்ஷந்து தே விபாவரி திவோ அப்ரஸ்ய வித்யுதஃ ।
ரோஹந்து ஸர்வபீஜாந்யவ ப்ரஹ்ம த்விஷோ ஜஹி ॥23॥
அர்த்தம்:
வர்ஷந்து – மழை
தே – உன்னுடைய
விபாவரி – கருணை ஒளி
திவோ – வானம்
அப்ரஸ்ய – இடி(யோசை)யுடன் மேகங்கள்
வித்யுதஃ – மின்னல்
ரோஹந்து – (உயர்ந்த ஆன்மீக தளத்துக்கு) வளரட்டும்
ஸர்வபீஜாந்யவ – வேறுபாட்டின் விதைகள்
ப்ரஹ்ம – அனைத்தும் அறிந்தவள்
த்விஷோ – விரோதம்
ஜஹி – அழிப்பாய்
பொருள்:
மகாலட்சுமி தாயே! இடியோசை, மின்னலுடன் மேகங்கள் மழையைப் பொழிவது போல் உன்னுடைய கருணை ஒளி எங்கும் பொழியட்டும். வேறுபாட்டின் விதைகள் யாவும் உயந்த ஆன்மீக தளத்துக்கு மேலோங்கி வளரட்டும். தெய்வநிந்தனை செய்வோரை விலக்கி ஓட்டுவாய்.
வெண்பா:
பாரினில்யா வும்செழிக்க மின்னலுடன் பெய்திடும்
மாரிபோல் நின்கருணை யைப்பொழிவாய் – வீரியமாய்
ஆன்மீகம் மேலோங்கி வேறுபாடு நிந்தனைகள்
நீங்கிடயா வும்அறிந்த தேவி
விளக்கம்:
அன்னையே, வானில் இடியோசையுட்ன் மழை வரும்போது ஏற்படும் மின்னல்போல் உன்னுடைய கருணை ஒளி எங்கும் பரவச் செய்வாய்.
அதன் மூலம் வேறுபாட்டின் விதைகள் யாவும் உயர்ந்த ஆன்மீக தளத்தை நோக்கி வளரட்டும். அனைத்தும் அறிந்தவளும் எல்லா நிந்தனைகளையும் அழிப்பவளும் நீயே!
பின்னூட்டமொன்றை இடுக