Tag Archives: பணம்

இணையம் மூலமாக பணம் சம்பாதிக்க ஒரு வாய்ப்பு!

26 அக்

இந்த வலைப்பூவில் பணம் என்ற தலைப்பைப் பற்றி நிறைய இடுகைகள் எழுதிப்பட்டிருக்கிறது. ஏனென்றால் இந்த உலகம் முழுவதும் பணத்தை சுற்றியே சுழன்று கொண்டிருக்கிறது என்பது அனுபவ உண்மை. அதுவும் இப்போதைய காலகட்டத்தில் பணத்தின் தேவை அதிகரித்திருக்கிறது. அது போலவே பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பும் அதிகரித்திருக்கிறது.

 இன்றைக்கு செல்போன் இல்லாத ஆட்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்று சொல்லும் வகையில் அனைவரிடம் செல்போன் இருக்கிறது. புரோகிராமிங் பற்றி தெரியாதவர்களும், கல்லூரியில் அது பற்றி கற்றுக் கொள்ளாதவர்களும் கூட, கம்ப்யூட்டர் மற்றும் செல்போனில் ஏதேதோ அப்ளிகேஷன்களை தரவிறக்கம் செய்து செயல்படுத்த கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

 அதாவது இணையவழி பயன்பாடு அதிகரித்திருக்கிறது. இது ஒரு நல்ல விஷயம் தான். இதைப் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதற்கு வழி இருக்கிறது. சிலர் அப்படி சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்த உலகில் எத்தனையோ வகையான பொருள்கள் தயாரிக்கப் படுகின்றன அவற்றை விற்பனை செய்வதற்கு சில பல கம்பெனிகளும் இருக்கின்றன. ஆனால் தனிப்பட்ட ஒரு மனிதனும் ஏதாவது ஒரு பொருளை விற்பனை செய்யவும் இப்போதைக்கு வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

 அதற்கு பெயர் அஃப்ளியேட் மார்க்கெட்டிங் (AFFLIATE MARKETING) என்று சொல்கிறார்கள். உதாரணமாக அமேசான் அத்தகைய வாய்ப்பை வழங்குகிறது. இணைய வழியாக பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் இதைப்பற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

அது மட்டும் இல்லாமல் யூடியூப் மூலமாகவும் பணம் சம்பாதிக்க வாய்ப்பு இருக்கிறது.

 இப்பொழுது GROOVE FUNNELS என்று ஒரு கம்பெனி புதிதாக இந்த வருடம் அக்டோபர் 6ஆம் தேதி ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது. அது அப்ளியேட் மார்க்கெட்டிங் வழியாக பணம் சம்பாதிக்கத் தேவையான மென்பொருள்களை இலவசமாக வழங்குகிறது.

இதற்கு முன்பும் இது போன்ற மென்பொருள்கள் பல இருந்தாலும் அவை விலை அதிகம் என்பதால் புதிதாக ஆரம்பிக்க எண்ணுபவர்களுக்கு தயக்கம் இருக்கலாம். உதாரணமாக CLICK FUNNELS, KARTRA போன்றவற்றைச் சொல்லலாம்.

 ஆனால் இந்த புதிய கம்பெனி ஆரம்ப கால கட்டம் என்பதால் இலவசமாகவே அந்த மென்பொருள்களை வழங்குகிறது. இதன் மூலமாக நீங்கள் புதிதாக உங்கள் இணையதளத்தையே உருவாக்கலாம். இன்னும் சில நாட்களில் இதற்கும் விலை நிர்ணயம் செய்துவிட வாய்ப்பு இருக்கிறது.

எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இணையம் மூலமாக பணம் சம்பாதிக்க எண்ணுபவர்கள் இங்கே தரப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Groovefunnels.

இந்த தலைப்பைப் பற்றி அவ்வப்போது சில இடுகைகள் வெளியிடலாம் என்ற எண்ணம் இருக்கிறது.

திண்ணையில் நமது சிறுகதை – அதிர்ஷ்டம்!!

4 பிப்

தமிழின் முதல் இணைய வார இதழான திண்ணையில் இந்த வாரம் (03-02-2013) நமது எட்டாவது சிறுகதை வெளியாகி இருக்கிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

திண்ணைக்கு நமது நன்றி!

அந்த சிறுகதையை வாசிக்க இங்கே சொடுக்கவும் அதிர்ஷ்டம்!!

ஏற்கெனவே திண்ணையில் வெளியான மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்.

நடுவுல கொஞ்சம் கடிவேலுவைக் காணோம்!!

23 ஜன

என்ன ஆயிற்று இந்த கவிஞர் கடிவேலுவுக்கு? கொஞ்ச நாட்களாக அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லையே! கடைசியாக புத்தாண்டு கவிதை எழுதி அனுப்பியதோடு சரி. அதன் பிறகு எங்கே போனார், என்ன ஆனார் என்று எதுவுமே தெரியவில்லை. நமக்கும் வேலைப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் கொஞ்ச நாட்களாக இடுகைகளை எழுத இயலாமல் போய் விட்டது. நாமும் கவிஞரை கொஞ்சம் மறந்து விட்டோம் என்பது உண்மைதான்!

ஆனால் நமது இடுகை வெளியான உடனேயோ அல்லது திண்ணையில் நமது சிறுகதை வெளியான உடனேயோ உடனுக்குடன் அதைப் பற்றிக் கருத்து தெரிவித்து விடுவார் நமது கவிஞர். ஆனால் நமது சென்ற இடுகையான ‘யார் கிச்சன் சூப்பர் ஸ்டார்?’ பற்றிக் கூட இதுவரை அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை. எனவே கவிஞருக்கு என்ன ஆயிற்று என்று நமக்கு கொஞ்சம் பயம் தொற்றிக் கொண்டது. ஒருவேளை உடம்பு சரியில்லாமல் சிகிச்சை பெற்று ஓய்வில் இருக்கிறாரோ? அல்லது வேறு ஏதாவது பிரச்சினையில் தவிக்கிறாரோ? இவ்வளவு நாள் ஒரு தகவலும் இல்லாமல் அவர் இருந்ததில்லையே!

பலவிதமாக யோசித்தாலும் விடை கிடைக்கவில்லை. ரொம்பவும் குழப்பமாகவே இருந்தது. வெளிநாடு எங்காவது சென்று விட்டாரோ? அப்படிப் போனால் நம்மிடம் சொல்லாமல் போக மாட்டாரே? இப்போது என்ன செய்யலாம்? அவருடைய செல்லுக்கு போன் போட்டுப் பார்த்தேன். கிடைக்கவில்லை. நமக்கு பதற்றமாகி விட்டது. என்னதான் ஆயிற்று? அவருடைய வீட்டுக்குப் போய் பார்க்கலாமா? அதுதான் சரி! நேரே அவருடைய வீட்டுக்குப் போய் பார்த்துவிட வேண்டியதுதான். உடனே ஆபீஸிலிருந்து கிளம்பி விட்டேன்.

நான் அவருடைய வீட்டை அடைந்த போது காலை மணி பதினொன்றைத் தாண்டி விட்டது. காம்பவுண்டைத் தாண்டி காலிங் பெல்லை அடிக்கலாமா என்று யோசித்த போதுதான் கவனித்தேன். கதவில் பூட்டு தொங்கியது. வீடு பூட்டி இருக்கிறது. சரி, பக்கத்தில் விசாரிக்கலாம் என்று பக்கத்து வீட்டு காலிங் பெல்லை அழுத்தினேன். கொஞ்ச நேரம் கழித்து வயதான பெரியவர் ஒருவர் கதவைத் திறந்தார்.

“ஐயா, பக்கத்து வீட்டில் கவிஞர் கடிவேலு என்று ஒருவர் இருந்தாரே, அவரைப் பார்க்க வந்தேன். ஆனால் வீடு பூட்டி இருக்கிறது. உங்களுக்கு ஏதாவது விபரம் தெரியுமா?” என்றேன்.

“ஓ! கவிஞரா? என்னுடைய நண்பர்தான். அவர் குடும்பத்தோடு சொந்த ஊர்ப்பக்கம் போயிருக்கிறார். இன்னும் பத்து இருபது நாள் கழித்துத்தான் வருவார்கள்” என்றார்.

“போய் ரொம்ப நாள் ஆகி விட்டதோ?” என்று கேட்டேன்.

“ஆமாம்! ஏதோ வியாபார விஷயமாக அங்கேயே கொஞ்ச நாள் இருக்க வேண்டியதிருக்கும் என்றார்” என்றார் பெரியவர்.

“ரொம்ப நன்றி ஐயா! மறுபடி திரும்பி வந்தவுடன், நான் வந்து போனதாகச் சொல்லுங்கள்” என்று என்னுடைய விசிட்டிங் கார்டை கொடுத்தேன்.

“எப்போதாவது இடையில் போன் செய்தால்கூட நீங்கள் வந்ததை அவரிடம் சொல்கிறேன்” என்றார். நன்றி சொல்லி விடை பெற்றேன்.

கவிஞர் மிகவும் தீவிரமாக அவருடைய வியாபார விஷயங்களைக் கவனிக்கிறார் என்பது புரிந்தது. அவருடன் நாம் நடத்திய உரையாடல்களைப் பற்றி முந்தைய இடுகைகளில் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தோம் அல்லவா?. இடையில் திடீரென்று ஒருநாள் வந்து டெங்கு நோயிலிருந்து மீண்ட இளைஞரைப் பற்றிச் சொல்லிவிட்டு இரண்டு ஒலி வடிவ உரையையும் கொடுத்து கேட்கச் சொல்லி இருந்தார். அதையும் ஒரு இடுகையில் சொல்லியிருந்தோம்.

அதிகமாகப் பணம் சம்பாதிப்பது யார்? என்ற நமது முந்தைய இடுகையில் நீர்ப்பறவை என்ற படத்தைப் பற்றி பேசிவிட்டு, அதுகூட ஒருவகையில் விளம்பரம்தான் என்று சொன்னார். அது போல நாமும் விளம்பரம் செய்யலாம் என்று ஒரு ஆசை வந்தது. அதனால்தான் விஜய் டிவியில் நாம் ரசித்த ‘கிச்சன் சூப்பர் ஸ்டார்?’ என்ற நிகழ்ச்சியைப் பற்றி எழுதியிருந்தோம். அதுவும் ஒருவகையில் விளம்பரம் போலத்தானே. ஆனால் கவிஞர் சொன்னது போல் விளம்பரம் செய்தால் எப்படி பணம் வரும் என்பது புரியவில்லை.

இன்னும் பல விஷயங்களைப் பற்றி நமக்கு ஆவல் ஏற்பட்டது. ஆனால் அவர் மறுபடி தொடர்பு கொண்டால்தான் கேட்க முடியும். இப்போது கவிஞரை மீண்டும் எப்போது காண்போம் என்று ஒரு ஏக்கமே உண்டானது. சீக்கிரமே அவர் தொடர்பு கொள்ள வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டேன்.

காத்திருப்போம். அதுவரை அவருடன் நாம் நடத்திய உரையாடல்களை நினைவு படுத்திக் கொள்ளலாம்.

கடந்த இடுகைகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்

டெங்கு நோயிலிருந்து மீண்ட இளைஞர்! ஓர் அதிசயம்!

அதிகமாகப் பணம் சம்பாதிப்பது யார்?

வியாபாரத்தின் முக்கியத்துவம்!

அதிகமாகப் பணம் சம்பாதிப்பது யார்?

13 டிசம்பர்

கடந்த இடுகையில் ரிஸ்க் இல்லாத வியாபாரம் என்று ஒன்று இருந்தால் அதை முயற்சி செய்ய பலரும் முன்வருவார்கள் என்று கவிஞர் கடிவேலு சொன்னபோது, ‘அப்படிப்பட்ட வியாபாரமும் இருக்கிறதா?’ என்று நாம் கேட்டோம். அதைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் நமக்கு ஆவல் ஏற்பட்டது. அந்த இடுகையை மீண்டும் வாசிக்க இங்கே சொடுக்கவும்.

“வியாபாரத்தில் பல வகைகள் இருக்கிறது என்று முன்பு சொன்னேனல்லவா? அதைப் பற்றித் தெரிந்து கொள்ளும் முன்பு ஒரு வியாபாரம் என்பது எப்படி பல கட்டங்களாக நடைபெறுகிறது என்பதைப் பார்ப்போம். பொதுவாகச் சொன்னால் வியாபாரம் என்பது ஒரு பொருளைத் தயாரித்து அதைப் பயன்படுத்துவோர்களிடம் விற்று லாபம் சம்பாதிப்பதுதான். அதில் தயாரிப்பவருக்கும், உபயோகிப்பாளருக்கும் இடையில் பலர் இருக்கிறார்கள் என்று ஏற்கெனவே பார்த்தோம். இப்போது ஒரு கேள்வி, இதில் யார் அதிகப் பணம் சம்பாதிக்கிறார்கள்? இன்னும் விளக்கமாகச் சொன்னால், ரிஸ்க் எதுவும் இல்லாமல் யார் அதிகப் பணம் சம்பாதிக்கிறார்கள்?” என்று கேட்டார்.

“இதில் சந்தேகமென்ன, தயாரிப்பவர்தானே அதிகப் பணம் சம்பாதிக்க முடியும்” என்றோம்.

அதைக் கேட்டு கவிஞர் சிரித்தார். பிறகு, “சமீபத்தில் நீர்ப்பறவை என்ற பெயரில் ஒரு சினிமாப் படம் வெளியாகியிருக்கிறதல்லவா?” என்று ஒரு கேள்வியைக் கேட்டார்.

“அந்தப் படத்தை இன்னும் பார்க்கவில்லை” என்றோம்.

“படம் பார்க்காவிட்டாலும், அது சம்பந்தமான முன்னோட்டமாக சில காட்சிகள் தொலைக்காட்சியில் வருவதைப் பார்த்திருப்பீரே? ஒரு காட்சியில் கதாநாயகன் பேசுவதாக ஒரு வசனம் வரும். அதாவது, ‘மீனைப் பிடிக்கிறவனை விட, அதை திங்கிறவனை விட, அதை வியாபாரம் செய்பவன்தான் பணக்காரன்’ என்பார்” என்று கூறினார் கவிஞர்.

“ஆமாம், நானும் பார்த்திருக்கிறேன். அது உண்மைதானே. சினிமாவில் மகத்தான சாதனையைப் படைத்த திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்து வெற்றிகரமாக ஓடிய படகோட்டி படத்திலும் எம்.ஜி.ஆர் மீனவராகவும், அதை வைத்து வியாபாரம் செய்யும் பணக்காரராக நம்பியாரும் நடித்திருப்பார்களே!” என்றோம்.

“அந்தக் கருத்தை நாம் இப்போது பேசிக்கொண்டிருக்கும் வியாபாரத்திற்கு பொருத்திப் பாரும். ஒரு பொருளைத் தயாரிப்பவரை மீன் பிடிப்பவராக உவமைப் படுத்தியும், மீன் சாப்பிடும் மக்களை அந்தப் பொருளை உபயோகிப்பவர்களாகவும் உவமைப் படுத்தினால், இப்போது யார் பணக்காரர் என்று சொல்லும்?” என்று கேட்டார்.

“அந்த இரண்டு பேருக்கும் இடையில் இருப்பவர்கள்தான் பணக்காரர்கள். அதாவது அந்தப் பொருளை உபயோகிப்பாளர்களிடம் கொண்டு வந்து சேர்ப்பவர்களும், அப்படி ஒரு பொருள் மார்க்கெட்டில் இருக்கிறது என்று விளம்பரம் செய்பவர்களும்தான் பணக்காரர்கள். நமக்கு இப்போது புரிகிறது” என்றோம்.

“அவர்களுக்கு ஏதாவது ரிஸ்க் இருக்கிறதா?” என்று கேட்டார்.

“அவர்களுக்கு என்ன ரிஸ்க் இருக்கிறது. வியாபாரம் செய்பவர்கள், பொருள் விற்றால் லாபம். சம்பாதிப்பார்கள். இல்லாவிட்டால் தயாரிப்பாளரிடம் திருப்பிக் கொடுத்து விடுவார்கள். அது போல் விளம்பரம் செய்பவர்களுக்கு வியாபாரம் ஆனாலும் ஆகாவிட்டாலும் கவலை இல்லை. அவர்கள் முதலிலேயே அதற்குரிய பணத்தை வாங்கி விடுகிறார்கள் அல்லவா?” என்றோம்.

“ஆக, இதில் பொருள்களைத் தயாரிப்பவர்களுக்கு லாபமோ, நஷ்டமோ வர வாய்ப்பிருக்கிறது. உபயோகிப்பாளர்கள் நான் ஏற்கெனவே சொன்னது போல் 30% (சதவீத) விலை மதிப்புள்ள பொருட்களை 100% (சதவீத) விலை கொடுத்து வாங்குகிறார். அதனால் அவருக்கும் நஷ்டம்தான். இதில் நீர் எந்த இடத்தில் இருக்க விரும்புகிறீர்கள்? தயாரிப்பாளராகவா, வியாபாரமோ, விளம்பரமோ செய்பவராகவோ அல்லது உபயோகிப்பாளராகவா?” என்று கேட்டார்.

“இப்போது புரிகிறது. வியாபாரமோ, விளம்பரமோ செய்பவர்கள்தான் பணம் சம்பாதிக்கிறார்கள்” என்றோம்.

“அவர்களைப் போல நீரும் வியாபாரமோ, விளம்பரமோ செய்து பணம் சம்பாதிக்கலாமே? அதில் ரிஸ்க் எதுவுமில்லையே” என்றார்.

“மீண்டும் ஆரம்பத்திலிருந்தா? வியாபாரம் செய்வதற்கு பணம் வேண்டாமா?” என்றோம். என்ன, இப்படி ஒரேயடியாக குழப்புகிறாரே!

“இங்குதான் முக்கியமான விஷயமே இருக்கிறது. வியாபாரம் செய்வதற்கு பணம் தேவையில்லை. ஆனால் விளம்பரம் செய்வதே உமது வியாபாரம் என்றால் அதைச் செய்யலாமல்லவா?” என்றார்.

“விளம்பரம் செய்வதா? நாம் என்ன சினிமா நடிகர்களா அல்லது விளையாட்டு வீர்ர்களா? அப்படி இருந்தால்தானே கோடிகோடியாகக் கொட்டி விளம்பரத்தில் நடிக்கக் கூப்பிடுவார்கள்” என்றோம்.

“நாம் இப்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் பொருள்களுக்காக நம்மை விளம்பரத்துக்கு யாரும் கூப்பிட மாட்டார்கள். ஆனால் நீங்கள் வாங்கும் பழக்கத்தை மாற்றி, அப்படி வாங்கும் பொருள்களுக்கு விளம்பரம் செய்யலாமே?” என்றார்.

“நாம் விளம்பரம் செய்ய வேண்டும் என்றால் நிறைய செலவு செய்ய வேண்டும். அதற்கும் நிறையப் பணம் வேண்டுமே. பணம் இல்லாமல் எதுவுமே செய்ய முடியாதே” என்றோம்.

“நீர் டிவியிலோ, பேப்பரிலோ விளம்பரம் செய்ய வேண்டாம். ஆனால் உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் அதைப் பற்றி சொன்னால், அதுவும் விளம்பரம்தானே. இப்போது நான்கூட நீர்ப்பறவை பற்றிச் சொன்னேனே. அதுகூட ஒருவகையில் விளம்பரம்தானே” என்றார்.

வியாபாரத்தின் முக்கியத்துவம்!

11 டிசம்பர்

சென்ற இடுகையில் நமது முன்னோர்கள் வியாபாரத்திற்காக பல நாடுகளுக்கும் சென்றிருக்கிறார்கள் என்றும் அதுபோல் பல நாடுகளிலிருந்தும் நம் நாட்டிற்கு பலரும் வியாபாரத்திற்காக வந்திருக்கிறார்கள் என்றும் கவிஞர் கடிவேலு சொன்னார். ஏன் வெள்ளைக்காரர்கள்கூட வியாபாரத்திற்காகத்தான் நம் நாட்டிற்கு வந்தார்கள் என்றும் சொன்னார். அதை மீண்டும் ஞாபகப் படுத்திக் கொள்ள இங்கே சொடுக்கவும் வாழ்க்கைத்தரம் உயர என்ன செய்ய வேண்டும்?

“வெள்ளைக்காரன் வியாபாரத்திற்காக வந்து நாட்டையே கைப்பற்றி விட்டான் என்று சொன்னீரே, அதனால் வெளிநாட்டுக்காரன் வியாபாரத்திற்காக நம் நாட்டுக்கு வர அனுமதிக்கக் கூடாது என்று சொல்ல வருகிறீரா? இப்போது அன்னிய முதலீடு பற்றி வரவேற்பும் எதிர்ப்புமாக நம் நாட்டில் பலமான விவாதம் நடக்கிறதே. பாராளுமன்றத்தில் கூட அதற்கு வாக்கெடுப்பு நடந்து மத்திய அரசுக்கு வெற்றி கிடைத்ததே அது பற்றி பேசுகிறீரா?” என்றோம்.

“வியாபாரம் என்பது எவ்வளவு சக்தி வாய்ந்த ஒன்று என்பதை விளக்குவதற்காகவே நாம் அந்த விஷயத்தை சொன்னோம். அன்னிய முதலீடு என்பது வரவேற்க வேண்டிய விஷயமாகத்தான் நமக்குத் தோன்றுகிறது. முன்பு நடந்தது போல் வெளிநாட்டுக்காரன் நம்மை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வாய்ப்பெல்லாம் இப்போது இல்லை. நாம் பெற்றிருக்கும் கல்வியறிவும், விழிப்புணர்வும், விஞ்ஞான வளர்ச்சியும் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள உதவும். ஆனால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நம்மை பெரிய அளவில் முன்னேற்றிக் கொள்ளவும் இது வழி செய்யலாம்” என்றார். தொடர்ந்து அவரே,

“வியாபாரத்தைப் பற்றி பேசும்போது, நான் கேள்விப்பட்ட நகைச்சுவை ஒன்று நமக்கு ஞாபகத்துக்கு வருகிறது. அதாவது அனுபவம் மிகுந்த ஒருவரும், அனுபவம் இல்லாத பணக்காரர் ஒருவரும் சேர்ந்து வியாபாரம் ஆரம்பித்தார்களாம். சில வருடங்கள் கழித்து, அனுபவம் மிகுந்தவருக்கு பணம் வந்து விட்டதாம். அனுபவம் இல்லாமல் பணம் வைத்திருந்தவருக்கு, பணத்திற்குப் பதிலாக அனுபவம் கிடைத்ததாம். அதுபோல நாம் ஏற்கெனவே நமது செல்வத்தை பறி கொடுத்தவர்கள். இன்று நம்மிடம் அனுபவமும், அறிவும் இருக்கிறது. அதனால் பணம் வைத்திருக்கும் வெளிநாட்டுக்காரன் முதலீடு செய்தால், அதை வைத்து நமது வளத்தைப் பெருக்கிக் கொள்ள வழிகாண வேண்டும்” என்றார்.

அவர் சொன்ன விஷயங்கள் நமது சிந்தனையைத் தூண்டியது.

முந்தைய காலத்தில் நமது நாடு எல்லா வளத்திலும், செல்வத்திலும் சிறந்து விளங்கியது. பொன்னும், வைரமும் நிறைந்த நாடாக விளங்கியது. வற்றாத ஜீவநதிகள் பாய்ந்து விவசாயம் செழித்திருந்தது. நமது மக்கள் நாகரீகத்திலும் பண்பாட்டிலும் சிறந்து விளங்கினார்கள். அதனால் இதைக் கேள்விப்பட்டு மற்ற எல்லா நாடுகளிலிருந்தும் மக்கள் நமது நாட்டுக்கு வரத் துடித்தார்கள். அமெரிக்கோ வெஸ்புகியும், கொலம்பஸும் அமெரிக்காவைக் கண்டுபிடிக்கவா கப்பலில் புறப்பட்டனர்? கொலம்பஸ் கடலில் வழிதவறி பல வகைகளிலும் பிரச்சினைகளால் அலைக்கழிக்கப்பட்டு கடைசியாக தரைப்பகுதியை அடைந்து, கரையிறங்கி அமெரிக்காவைக் கண்டுபிடித்தது தற்செயலாக நடந்ததுதானே! மற்றபடி அவர்கள் கப்பலில் புறப்பட்டது நமது நாட்டிற்கு வழி கண்டுபிடிப்பதற்காக அல்லவா?

அப்படிப்பட்ட செல்வச் செழிப்பு மிகுந்த நம் நாடு பல காலமாக பல வகைகளிலும் மற்றவர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. ஆனாலும் இப்போது நம் நாடு மீண்டும் தலை நிமிர்கிறது. இப்போது நமது நாட்டில் மனிதவளம் மிகுந்துள்ளது. நாம் கல்வியறிவு பெற்றவர்களாக, பலவித ஆற்றல்கள் உள்ளவர்களாக மாறி இருக்கிறோம். அதனால்தான், நமது நாட்டிலிருந்து பலர் வெளிநாட்டினரால் ஈர்க்கப்பட்டு பல நிறுவனங்களிலும் முக்கியமான பதவிகளில் பணியில் அமர்த்தப்பட்டு அந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள். இது நாடறிந்த உண்மை.

இன்னும் ஏராளமானவர்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். அவர்களின் ஆற்றலும் உழைப்பும் நம் நாட்டுக்குப் பயன்படுவதாக இருந்தால் நம் நாடு இன்னும் விரைவில் பெரிய வல்லரசாக மாறுவதற்கான வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது. அதற்கு இப்போதைய மாற்றங்கள் உதவிகரமாக இருக்க வாய்ய்புள்ளது. அந்த மாற்றங்கள் நமது நாட்டில் வியாபார வளர்ச்சிக்கு உதவியாக இருந்தால் நமது தனிமனித வருமானம் உயர வாய்ப்புள்ளது. அந்த வகையில் நாட்டின் முன்னேற்றமும் விரைவில் சாத்தியமாகும்.

தொடர்ந்து கவிஞர் சொன்ன விஷயத்தின் அடிப்படையில் நமது கேள்வியைக் கேட்டோம்.

“கவிஞரே, “நமக்கு வியாபாரத்தின் முக்கியத்துவம் புரிகிறது. ஆனால் எல்லோராலும் வியாபாரத்தை ஆரம்பிக்க முடிவதில்லையே. அப்படியே சிலர் ஆரம்பித்தாலும், அப்படி ஆரம்பித்த எல்லோராலும் அதில் வெற்றி பெற முடிவதில்லையே. அதனால்தானே வியாபரம் செய்ய பலரும் தயங்குகிறார்கள்?” என்றோம்.

“உண்மைதான்! வியாபாரம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்பது புரிந்தாலும் நிறையப் பேர் அதை செய்ய விரும்பாததற்குக் காரணம், அதில் உள்ள ரிஸ்க்தான். அதனால் ரிஸ்க் இல்லாத வகையில் மாதச் சம்பளத்துக்கு வேலை பார்ப்பதையே எல்லோரும் விரும்புகிறார்கள். அதிலேயே தங்கள் வாழ்க்கையைக் கழிக்கிறார்கள். ஆனால் ரிஸ்க் இல்லாத வியாபாரம் என்று ஒன்று இருந்தால், அதுவும் தற்போது செய்து கொண்டிருக்கும் வேலையை எந்த விதத்திலும் பாதிக்காத வகையில் இருந்தால் அது போன்ற வியாபாரத்தை முயற்சி செய்ய பலரும் முன்வருவார்கள் அல்லவா?” என்று கேட்டார்.

“அப்படிப்பட்ட வியாபாரமும் இருக்கிறதா? ஆச்சரியமாக இருக்கிறதே! அதுபோல் ரிஸ்க் இல்லாத வியாபாரமாக இருந்து, அதில் நல்ல வருமானமும் கிடைக்கும் என்றால் நிச்சயமாக பலரும் முயற்சி செய்வார்கள்” என்றோம்.

வாழ்க்கைத்தரம் உயர என்ன செய்ய வேண்டும்?

6 டிசம்பர்

வழக்கமாக திண்ணையில் வெளிவரும் நம்முடைய கதையை நமக்கு முன்பே படித்து நம்மை வாழ்த்தும் கவிஞர் கடிவேலு இந்த முறை ஏனோ நமக்கு எந்த தகவலும் அனுப்பவில்லை. ஒருவேளை இந்த விருப்பும் வெறுப்பும் சிறுகதை, ஒரு காதல் கதை என்பதால் இதற்கு என்ன கருத்து சொல்வது என்று நினைத்து ஒன்றும் சொல்லாமல் விட்டு விட்டாரோ? என்று நமக்குத் தோன்றியது.

ஆனால் மாலை நேரத்தில் கவிஞரிடமிருந்து போன் வந்தது. முதல் நாள் இரவிலிருந்து அவர் வீடு இருக்கும் பகுதியில் கரண்ட் இல்லாததால் கம்ப்யூட்டரை மாலை வரை பயன்படுத்த முடியவில்லையாம். மாலையில்தான் நமது கதையைப் படித்தாராம். அந்தக்கதையை அலசி ஆராய்ந்து அவர் தன்னுடைய கருத்தைச் சொன்ன போது நமக்கு மிகவும் வியப்பாக இருந்த்து. எப்படி இவருக்கு மட்டும் இப்படியெல்லாம் தோன்றுகிறது என்று ஆச்சரியம் மேலிட்டது.

“விருப்பும் வெறுப்பும் கதையின் கதாநாயகி வனிதாவுக்கு சில நாட்கள் பழகிய பின்னும் கூட யார் நல்லவன் யார் கெட்டவன் என்று தீர்மானிக்க முடியவில்லை. அப்படி இருக்கும் போது புதிதாக ஒரு வியாபார வாய்ப்பை ஒருவர் காண்பிக்கும் போது முதல் முறையாக அதைப் பார்ப்பவருக்கு எப்படி அவர் மீது நம்பிக்கை வரும். அந்த வியாபார வாய்ப்பு நல்லதா கெட்டதா என்று எப்படி தீர்மானிக்க முடியும்?” என்றார்.

பின்பு அவரே, “அவள் சிவசங்கரனைப் பார்க்கச் சென்றபோது, அவர் கூறிய கருத்துக்கள் சிந்திக்க வைக்கும் கருத்துக்கள். விருப்பும் வெறுப்பும் எப்போதும் மாறலாம். அதனால் ஒருவருக்கு இந்த வியாபாரத்தின் மீது ஏற்கெனவே ஏற்பட்ட அனுபவத்தின் காரணமாகவோ, மற்றவர்கள் எதிர்மறையான கருத்துக்களைக் கூறும் போதோ வெறுப்பு வருவது இயற்கை. ஆனால் அவருக்கே இது, தனது இரண்டாவது வருமானத்துக்கான நிச்சயமான வழி என்பது புரியும் போது அதே வியாபாரத்தின் மீது விருப்பம் வருவதும் இயற்கைதான்” என்றார். அத்தோடு, “கடந்த கால அனுபவங்களின் மூலமாக நமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் நம் மனதில் நிறைந்து இருந்தால் அந்த மாதிரி விஷயங்களையே மேலும் மேலும் நம்மை நோக்கி ஈர்க்கிறோம். இது Law of attraction என்னும் இயற்கை விதி. அதற்குப் பதிலாக வேறு நல்ல விஷயங்களை நிரப்பி விட்டால் தேவையில்லாத விஷயங்கள் நம்மை விட்டு அகன்று விடும் என்பது இந்தக் கதையின் மூலம் தெரிய வரும் செய்தியாகும்” என்றார். தொடர்ந்து அவரே,

“அதுபோல் ஒருவருக்கு ஒன்றில் மீது தீவிரமான காதல் ஏற்பட்டு அதில் வெற்றி அடைவதற்காக அவர் விடாப்பிடியாக முயற்சி செய்யும்போது, அதற்காக தன்னை மாற்றிக் கொள்ளவும் தயாராக இருக்கும்போது அவருக்கு அதை அடைவது எளிதாகும் வகையில், இயற்கையாகவே எல்லா சூழ்நிலையும் மாறும் என்பதும் இந்தக் கதையின் மூலம் புலனாகிறது” என்றார் கவிஞர். இவ்வளவு நுணுக்கமாக அந்தக் கதையை அவர் அலசி ஆராய்ந்திருப்பது நமக்கு ஆச்சரியமாக இருந்தது.

சரி! தொடர்ந்து முந்தைய இடுகையில் சொன்ன விஷயங்களைப் பற்றி அவருடன் நம்முடைய உரையாடல் சம்பந்தமான விஷயத்தை கவனிக்கலாம். சென்ற இடுகையில் வந்த கவிஞரின் கவிதையைப் படித்து விட்டு ‘வாழ்க்கைத்தரம் மாற வேண்டுமானால் ஏதாவது வியாபாரம் செய்தால்தான் சாத்தியமாகும் என்று நமக்குப் புரிந்தது’ என்று சொல்லியிருந்தோம் அல்லவா? ஆனாலும் அதில் நமக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அதாவது நடைமுறையில் எல்லோராலும் வியாபாரத்தில் இறங்குவது சாத்தியமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதனால் அதை அவரிடமே கேட்டோம்.

“கவிஞரே, வியாபாரம் என்பது அவ்வளவு எளிதான விஷயமா? முதலில் அதற்கு முதலீடு தேவைப்படும். அதில் அனுபவம் இருக்க வேண்டும். ஒரு இடம் பார்த்து அட்வான்ஸ் கொடுத்து, ஆட்களை வேலைக்கு வைத்து, அதை மேற்பார்வை செய்ய நாள் முழுதும் அங்கேயே இருந்து வியாபாரத்தைக் கவனிக்க வேண்டும். இதெல்லாம் எல்லோருக்கும் முடிகிற விஷயமா? நடக்கிற காரியமா இது?

அத்தோடு அப்படி ஆரம்பித்த வியாபாரத்தில் நஷ்டம் வராது என்று உறுதியாகச் சொல்ல முடியுமா? போட்டியை சமாளிக்க வேண்டும். லைசன்ஸ் பெற வேண்டும். எத்தனை விஷயங்கள் இருக்கிறது? வியாபாரம் செய்பவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும் என்ற உமது கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். ஆனால் வியாபாரத்தில் இத்தனை பிரச்சினைகள் இருக்கிறதே! இருப்பதை விட்டு விட்டு பறப்பதை பிடிக்க ஆசைப்பட்ட கதையாக அல்லவா ஆகிவிடும்” என்றோம்.

நாம் பேசி முடிக்கும் வரை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். பிறகு நம்மிடம் சில கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். “நீர் சொல்வது போல வியாபாரம் என்பது எளிதான விஷயம் அல்ல. ஆனால் வியாபாரத்தில் பல வகைகள் இருக்கின்றன” என்றார்.

“வியாபாரத்தில் பல வகைகளா?” என்றோம் ஆச்சரியமாக. அதற்குப் பதிலாக கவிஞர் இன்னொரு கேள்வியைக் கேட்டார்.

“வியாபாரம் என்றால் என்ன?”

“ஒரு பொருளை ஒரு இடத்தில் வாங்கி இன்னொரு இடத்தில் விற்பது. அதில் ஒரு லாபம் சம்பாதிப்பது. இதுதான் வியாபாரம்” என்றோம்.

“பொதுவாக இப்படித்தான் பெரும்பாலானோர் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் வியாபாரம் என்பது யாருக்கு எந்தப் பொருள் தேவை இருக்கிறதோ, அந்தப் பொருளை அவர்களுக்கு கொடுத்து அதற்குரிய பணத்தையோ அல்லது அதே மதிப்பிலான இன்னொரு பொருளையோ பெறுவதுதான் வியாபாரம். பழங்காலத்தில் நமது முன்னோர்களும் திரைகடலோடி திரவியம் தேடினார்கள்” என்றார்.

“ஆமாம், நீர் சொல்வது உண்மைதான். நம் முன்னோர்கள் வியாபாரத்திற்காக பல நாடுகளுக்கும் சென்றிருக்கிறார்கள். அதுபோல் யவனர்களும், அரேபியர்களும், ஃபிரெஞ்சுக்காரர்களும், போர்த்துக்கீசியர்களும், ஏன் சீனர்களும்கூட நம் நாட்டிற்கு வந்திருக்கிறார்கள்” என்றோம்.

“நமது நாட்டிற்கு வெள்ளைக்காரனும் வியாபாரத்திற்காகத் தானே வந்தான். நம்மிடம் கிடைக்காத பொருட்களை நம்மிடம் கொடுத்து அதற்கு பதிலாக விலை மதிப்புள்ள பொருட்களைப் பெற்றான். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நாட்டையே கைப்பற்றி விட்டான்” என்றார்.

அவர் சொல்வதெல்லாம் உண்மையென்றாலும் அந்த விஷயங்களை தன்னுடைய கருத்துக்கு ஆதரவாக அவர் சொன்னபோது நமக்கு ஏற்பட்ட வியப்புக்கு அளவேயில்லை. அதனால் அவர் சொல்வதை அமைதியாக கேட்டுகொண்டிருந்தோம்.

உங்கள் வருமானம் எப்படி செலவாகிறது?

1 டிசம்பர்

சென்ற இடுகையில் பொருளாதாரத்தில் சுதந்திரம் அடைய விரும்பும் ஒருவர் எதை முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நாம் கேட்ட கேள்விக்கு, மனோபாவத்தை மாற்ற வேண்டும் என்று கவிஞர் கடிவேலு சொன்னது நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் வாங்கும் பழக்கத்தை மாற்ற வேண்டும் என்று சொன்னது நமக்குப் புரியவில்லை. அதனால் நமது சந்தேகத்தை கவிஞரிடமே கேட்டோம்.

“கவிஞரே, வாங்கும் பழக்கத்தை மாற்ற வேண்டும் என்று சொல்கிறீரே, அது எப்படி என்று நீர் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லும்?” என்ற நமது கேள்விக்கு,

“காலையில் தூங்கி எழுந்ததிலிருந்து இரவு படுக்கச் செல்லும் வரை எத்தனையோ பொருட்களை நாம் உபயோகப் படுத்துகிறோம். அந்தப் பொருட்களையெல்லாம் ஏதோ ஒரு கடையில் பணம் கொடுத்துத்தானே வாங்குகிறோம்?” என்று கேட்டார்.

“இது எல்லோருக்கும் தெரிந்த சாதாரண விஷயம்தானே! நாம் எழுந்து பல் துலக்கி காபி குடிப்பதிலிருந்து, குளிக்க சோப்பு பயன்படுத்துவது, ஷாம்பு போடுவது, துணிகளை துவைப்பது, தலைக்கு எண்ணெய் தேய்ப்பது, முகத்துக்கு பவுடர் பூசுவது, சன் ஸ்கிரீன் போடுவது என்று எத்தனையோ பொருட்களை பயன்படுத்துகிறோம். அதனால் என்ன?” என்றோம்.

“சரியாகச் சொல்லி விட்டீர். இது போன்று நிறையப் பொருட்களை நாம் தினமும் பயன்படுத்துகிறோம். இவற்றையெல்லாம் கடையில்தான் வாங்குகிறோம். அது நமக்கு வரவா அல்லது செலவா?” என்று கேட்டார்.

“இது என்ன கேள்வி? இவற்றையெல்லாம் பணம் கொடுத்துத்தான் வாங்குகிறோம். அதனால் எல்லாமே செலவுதான். நம்முடைய மாத பட்ஜெட்டில் இவற்றுக்கென்று ஒரு தொகை கட்டாயம் ஒதுக்கத்தான் செய்கிறோம்” என்றோம்.

“அந்தப் பொருட்களைத் தரத்திற்காக வாங்குகிறீர்களா? அல்லது விலை குறைவாக இருப்பதனால் வாங்குகிறீர்களா?” என்று இன்னொரு கேள்வியைக் கேட்டார்.

“பொருட்கள் தரமானதாகவும் இருக்க வேண்டும். அதே சமயம் விலையும் நமக்கு கட்டுபடியாகக்கூடிய அளவில் இருக்க வேண்டும்” என்றோம்.

“சரி, இந்த இந்த பிராண்டு உள்ள பொருட்கள் வேண்டும் என்று கேட்டு வாங்குவீர்களா? அல்லது கடைக்காரரிடம் எது நல்ல தரமான பொருள் என்று விசாரித்து வாங்குவீர்களா?” என்று கேட்டார்.

“ஏதாவது ஒரு பிராண்டு பெயரை சொல்லிதான் கேட்போம்” என்றேன்.

“அப்படி ஒரு பிராண்டு இருப்பது உமக்கு எப்படித் தெரியும்?” என்று மறுபடி ஒரு கேள்வியைக் கேட்டார்.

“கவிஞரே, நீர் என்ன சொல்ல வருகிறீர். அதைச் சொல்லும்” என்றோம் நமக்கு உடனே விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல்.

“சொல்கிறேன். அதற்கு முன்னால் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லும். அப்படி ஒரு பிராண்டு இருப்பது உமக்கு எப்படித் தெரியும்?” என்றார் மீண்டும்.

“விளம்பரங்களில் பார்க்கிறோமே. அதை வைத்துத்தான் தெரிந்து கொள்ள முடியும்” என்றோம்.

“ஆங், அதைத்தான் கேட்டேன். அந்த விளம்பரத்துக்கு யார் காசு கொடுக்கிறார்கள்?” என்றார். மறுபடியும் ஒரு கேள்வியா?.

“இதிலென்ன சந்தேகம், அந்தப் பொருளைத் தயார் பண்ணும் கம்பெனிதான் பணம் கொடுக்கும்” என்றோம்.

“அதுதான் இல்லை. அதற்கு நீர்தான் பணம் கொடுக்கிறீர்” என்றார்.

“என்னது, நான் பணம் கொடுக்கிறேனா?” என்றேன் ஆச்சரியமாக.

“ஆமாம், உம்மைப் போன்ற வாடிக்கையாளர்கள்தான் அந்தப் பணத்தைக் கொடுக்கிறார்கள்”

“அந்தப் பொருளில் இருக்கும் விலையைத்தானே கொடுக்கிறோம். அதிகமாக எதுவும் கொடுப்பதில்லையே” என்றேன் குழப்பமாக.

“அங்குதான் விஷயமே இருக்கிறது. மார்க்கெட்டுக்கு வரும் எந்தப் பொருளும், அதில் எழுதப்பட்டிருக்கும் உட்சபட்ச விலையில் தோராயமாக 30% சதவீத விலை மதிப்பில்தான் தயாரிக்கப் படுகிறது. ஆனால் கடைக்கு வரும்போது 100% சதவீத விலையில் விற்பனை செய்யப் படுகிறது. அதாவது 30% சதவீத விலை மதிப்புள்ள ஒரு பொருளுக்கு 70% சதவீதம் அதிகமாக விலை கொடுத்துத்தான் நாம் பொருட்களை வாங்குகிறோம்” என்றார்.

“அப்படியா, ஆச்சரியமாக இருக்கிறதே! நீர் சொல்வது சரிதான் என்று எப்படி உறுதி செய்து கொள்வது?” என்று கேட்டோம்.

“சரி, நீர் பொருட்களை வாங்கும் கடையில், அந்த கடைக்காரர் லாபம் சம்பாதிப்பதற்காக அந்தக் கடையை நடத்துகிறாரா அல்லது சேவை மனப்பான்மையுடன் லாபமில்லாமல் நடத்துகிறாரா?” என்று ஒரு கேள்வியைக் கேட்டார்.

“லாபத்துக்காகத்தான் அந்தக் கடையை நடத்துகிறார். அவர் என்ன சேவையா செய்கிறார்? ஒவ்வொரு பொருளிலும் ஒரு குறிப்பிட்ட அளவு லாபம் வைத்துத்தான் பொருட்களை விற்கிறார்” என்றோம்.

“கரெக்ட். அதாவது பத்து அல்லது பதினைந்து சதவீதம் லாபம் வைத்துத்தான் வியாபாரம் செய்கிறார். அதைத் தவறு என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அப்படித்தான் காலங்காலமாக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அந்த லாபத்தையும் நாம்தான் கொடுக்கிறோம்” என்றார்.

“இப்போது புரிகிறது. இதே போல் மொத்தக் கடைக்காரர் ஒரு குறிப்பிட்ட சதவீதம் லாபம் வைத்துத்தான் இவருக்கு பொருட்களைக் கொடுக்கிறார். ஏஜென்டுகளிடமிருந்து பொருட்களை வாங்கும்போது ஒரு குறிப்பிட்ட சதவீதம் அதிகமாகக் கொடுத்துத்தான் மொத்தக் கடைக்காரர் வாங்குகிறார். சரிதானே!” என்றோம்.

“ரொம்ப சரி, அப்படி ஒவ்வொருவராக பொருட்கள் கைமாறும் போது, அதன் விலை அதிகமாகிறது. அத்தோடு அப்படி ஒரு பொருள் மார்க்கெட்டுக்கு வந்திருக்கிறது என்று பொதுமக்களுக்கு தெரிய வைப்பதற்காக பெரிய அளவில், நிறையப் பணம் செலவழித்து விளம்பரம் செய்யப் படுகிறது. அதற்காகும் செலவும் அந்த விலையில் தான் சேர்க்கப் படுகிறது. வாடிக்கையாளர்களாகிய நாம்தான் அதற்கும் சேர்த்து பணம் கொடுக்கிறோம்” என்றார் கவிஞர்.

அவர் சொல்வது உண்மைதான் என்றாலும் அதில் என்ன தவறு என்றுதான் நமக்குப் புரியவில்லை. எல்லோரும் வியாபாரம்தான் செய்கிறார்கள். அதில் ஒரு லாபம் சம்பாதிக்கிறார்கள். இது நடைமுறையில் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நேர்மையான தொழில்தானே. எதற்காக கவிஞர் இதைப் பற்றி பேசுகிறார் என்று புரியவில்லை.

“கவிஞரே, இது காலங்காலமாக நடக்கும் விஷயம்தானே, இதில் என்ன தவறு இருக்கிறது?” என்று கேட்டோம்.

“தவறு ஒன்றும் இல்லைதான். ஆனால் கொஞ்சம் யோசித்துப் பாரும். நீர் கஷ்டப்பட்டு வேலை செய்து ஒரு வருமானம் சம்பாதிக்கிறீர். அதை செலவு செய்து உமக்குத் தேவையான பொருட்களை கடையில் வாங்குகிறீர். அப்படி வாங்குவதால் உமது வருமானத்தில் 70% சதவீதத்தை யார் யாருக்கோ கொடுக்கிறீர்கள். அவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். இது உமது வாழ்நாள் பூராவும் தொடர்கிறது” என்றார்.

அவர் கூறிய விஷயம் நம்மை யோசிக்க வைத்தது.

மாற்றமே மன அமைதியைக் கொடுக்கும்!

29 நவ்

சென்ற இடுகையில் நமது கதையைப் பற்றி தன்னுடைய அபிப்பிராயத்தை தெரிவித்த கவிஞர் கடிவேலு ஒரு புதுக் கவிதையையும் சொன்னார் அல்லவா? அதன் பிறகு மாற்றம் ஒன்றே முன்னேற்றத்துக்கு அடிப்படை என்றார். அதை மீண்டும் ஞாபகப் படுத்தி கொள்ள இங்கே சொடுக்கவும். கவிஞர் சொன்ன புதுக் கவிதை!

அதன் பின்னர் கவிஞருடன் நாம் நெட்வொர்க் பிஸினஸைப் பற்றி சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். ஆனால் நமது வேலைப்பளு மிகவும் அதிகமாகி விட்ட காரணத்தினால் அடுத்த இடுகையை எழுதுவது மிகவும் தாமதமாகி விட்டது. அப்போது பேசிய விஷயங்களை இந்த இடுகையில் தொடர்கிறோம்.

“நீர் சொல்வது சரிதான்! கால ஓட்டத்துக்குத் தகுந்த மாதிரி நாமும் மாற வேண்டும். அப்போதுதான் முன்னேற முடியும்” என்று ஆமோதித்தோம்.

“ஆனால் பெரும்பாலானோர் மாற்றத்தை உடனடியாக ஏற்றுக் கொள்வதில்லை. அதுதான் அவர்களுடைய பிரச்சினை” என்றார்.

“ஏன் தயங்குகிறார்கள்? அப்படி மாற்றத்தை ஏற்றுக் கொள்ள சிலர் மறுப்பதற்கு காரணம் என்ன?” என்று வினவினோம்.

“எல்லாம் நமது மூளையின் உண்மையான சக்தியை புரிந்து கொள்ளாததுதான் காரணம். ஒரே மாதிரி வேலையை செய்து பழக்கப்பட்ட நமக்கு, நாளடைவில் அது சுகமானதாக மாறி விடுகிறது. அதனால் ஏற்பட்ட அனுபவங்கள் நமது மூளையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பல நியூரான்களின் தொகுப்பாக பதிவாகி இருக்கும். அதாவது நமது கடந்த கால அனுபவங்களும், நமக்கு ஏற்பட்ட உணர்ச்சிகளும் அந்த நியூரான்களில் பதிவாகி இருக்கும். அதன் காரணமாக நமக்கு ஏற்படும் ஒரு வகையான நம்பிக்கையே, நமது சிந்தனையையும், எண்ணங்களையும், செயல்பாடுகளையும் நிர்ணயிக்கிறது. அந்த அடிப்படையில்தான் நாம் எந்த ஒரு புதிய விஷயத்தையும் அணுகுகிறோம். அப்படி நாம் ஒரு புதிய விஷயத்தை முயற்சி செய்ய நினைக்கும்போது அது பற்றி ஒரு பயம் ஏற்படுவது இயற்கை. அந்த பயம் காரணமாகவே புதிதாக எந்த முயற்சியையும் செய்ய பெரும்பாலானோர் தயங்குகிறார்கள்” என்றார் கவிஞர்.

அவருடைய பேச்சு நமக்கு இதுவரை தெரியாத, கேள்விப்படாத ஒரு உண்மையை உணர்த்துவதாக தோன்றியது. அதனால் நாம் மேலும் கேட்பதற்கு தயாராக மௌனம் காத்தோம். கவிஞரே தொடர்ந்தார்.

“நமது மூளையில் கோடிக்கணக்கான நியூரான்கள் இருப்பது தெரியுமல்லவா? அது நமது சிந்தனைக்கேற்பவும், அனுபவத்திற்கேற்பவும் மாற்றமடைகிறது. நீங்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது இந்த நியூரான்களும் மாற்றமடைகிறது. அப்படி ஏற்படும் மாற்றம் நமது பயத்தைப் போக்கி நமக்கு மன அமைதியைக் கொடுக்கிறது” என்றார்.

“அப்படியா! புதிய விஷயங்களை முயற்சி செய்யும்போது, நாம் சந்திக்கும் பிரச்சினைகளால் நமக்கு மன அமைதி குறையும் என்றுதானே கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் நீர் மன அமைதி ஏற்படும் என்கிறீரே?” என்றோம்.

“இதைத்தான் தன்னுடைய வாழ்க்கையில் விரும்பும் மாற்றத்தை உங்கள் கேள்விகள் அமைத்துக் கொடுக்கும் (Ask Yourself Questions And Change Your Life) என்ற தன்னுடைய அற்புதமான புத்தகத்தில் ஆர்லென் ஹார்டெர் (Arlene Harder) சொல்லியிருக்கிறார்” என்றார். “அதாவது

‘நம்பிக்கை-நடத்தை-விளைவுகள்-நம்பிக்கை என்ற வட்டத்தில் நம் சிந்தனைகளைச் சுருக்கிக் கொள்வதால் புதிய கருத்துக்களுக்கு நாம் இடம் கொடுப்பதில்லை. அதாவது நாம் பாதுகாப்பாக உணர்ந்திருக்கும் கூட்டிலிருந்து வெளியேறாமல் அரைத்த மாவையே அரைத்து சுகம் கண்டு கொண்டிருக்கிறோம். அதனால் செய்ததையே திரும்பத் திரும்ப செய்து மூளையும் பழகி விடுகிறது. எண்ணங்களும், நடத்தைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக, ஒரே வழியில் பயணிக்கச் செய்கிறோம். குடை இராட்டினமாக வாழ்வதில் சுகம் கண்டு விட்டோம். ஏதும் தொல்லைகள் நேராத வரையில் அந்தச் சுற்று விளிம்பைத் தாண்டி வெளியேற ஒருபோதும் நாம் சிந்திப்பதில்லை.

என்கிறார் அவர்” என்றார் கவிஞர். தொடர்ந்து அவரே, “அத்தோடு

‘இது நல்லது அல்லது கெட்டது என்று எவ்வித பாகுபாடும் செய்யாமல் ஒரு கேமரா படம் பிடிப்பதைப் போல நிகழ்வுகளைப் பட்சம் சாராமல் பார்க்கப் பழகுங்கள். இதைப் பழகப் பழக உங்கள் கண்ணோட்டம் மாறுபடும். புதிய விஷயங்கள் உங்கள் புத்தியில் பதியும். புதிய எண்ணங்கள் உங்கள் மனதில் உருவாகும். இது சரியா தவறா, நல்லதா கெட்டதா என்று ஒவ்வொரு முறையும் மதிப்பீடு செய்து பார்க்கப் பழகிக் கொண்டிருப்பதால் இழந்திருக்கும் உள்மன அமைதியை நீங்கள் மறுபடியும் பெற்று ஆனந்தமடைவீர்கள். உங்கள் நடத்தைகளையும் மற்றவர்கள் நடத்தைகளையும் ஒப்பிட்டுப் பார்த்து அசூசை படும் மனதை மாற்றிக்கொள்ளும் நேரத்தில் நிர்மலமான சந்தோஷம் உங்களுக்கு ஒப்பற்ற மன அமைதியைக் கொடுக்கும்’

என்றும் ஆர்லென் ஹார்டெர் அந்தப் புத்தகத்தில் கூறியிருக்கிறார்” என்றார் கவிஞர்.

அவர் சொன்ன விஷயங்களைக் கேட்ட பிறகு, ஒவ்வொரு மாற்றமும் எவ்வளவு முக்கியமானது என்றும், நாம் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியமும் புரிந்தது.

“கவிஞரே, நீர் சொல்வது அற்புதமான விஷயம்தான். மாற்றம் ரொம்பவும் முக்கியமானது என்பது நன்றாகப் புரிகிறது. இப்போது நான் கேட்கும் ஒரு கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லும். ஒருவர் பொருளாதாரத்தில் சுதந்திரம் அடைய விரும்புகிறார் என்றால் அவர் முதலில் எதை மாற்ற வேண்டும்?” என்று கேட்டோம்.

“முதலில் அவரது மனோபாவத்தை மாற்ற வேண்டும். அதற்கு முதல் கட்டமாக அவருடைய வாங்கும் பழக்கத்தை மாற்ற வேண்டும்” என்றார்.

கவிஞர் சொன்ன புதுக் கவிதை!

16 நவ்

தீபாவளிக்கு விடுமுறைக்குப் பிறகு இன்னும் சில விஷயங்கள் நம்மோடு பேச வேண்டும் என்று கவிஞர் கடிவேலுவை கேட்டுக் கொண்டோம் அல்லவா? அதை ஞாபகப் படுத்திக் கொள்ளவும் இதற்கு முந்தைய இடுகையை படிக்கவும் இங்கே சொடுக்கவும்.

அதன்படி தீபாவளி முடிந்த அடுத்த நாள் அவர் நம்மைத் தொடர்பு கொண்டார். அன்று நம் ஆபீஸுக்கு வருவதாகச் சொன்னார். நமக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது. சீக்கிரமே கிளம்பி ஆபீசுக்குப் போய் கவிஞரின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தோம். சரியாக 9.30க்கு கவிஞர் வந்தார்.

“கவிஞரே, தீபாவளியெல்லாம் நல்லபடியாக முடிந்ததா?” என்று பேச்சை ஆரம்பித்தோம்.

தீபாவளியை தன்னுடைய குடும்பத்தில் எல்லோரும் உற்சாகமாகக் கொண்டாடியதாகச் சொன்னார். பிறகு நாம் எழுதியிருந்த நைலான் கயிறு…!…? சிறுகதை தம்மை மிகவும் யோசிக்க வைத்ததாகச் சொன்னார்.

“அப்படி என்ன யோசிக்க வைத்தது?” என்று வினவினோம்.

“அந்தக் கதையில் வரும் மாப்பிள்ளை புத்திசாலி, நல்ல கம்பெனியில் வேலை பார்க்கிறார். கை நிறைய சம்பாதிக்கிறார் என்று எழுதியிருந்தீர். தன்னைப் போல் ஒரு பிசினஸ்மேனை மாப்பிள்ளையாக்காமல் கம்பெனியில் வேலைக்கு செல்பவரை தன்னுடைய பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்ததில் அவருடைய அனுபவம் தெரிகிறது” என்றார்.

“இதில் என்ன புதுமை இருக்கிறது? இது நிறைய இடங்களில் நடக்கும் விஷயம்தானே! கம்பெனி வேலையில் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட வருமானம் சம்பளமாகக் கிடைத்து விடுகிறதல்லவா? குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்குமே!” என்றோம்.

“ஆமாம், திருமணமான புதிதில் பணத்தை விட வாழ்க்கையில் மகளின் சந்தோஷத்தையே பெற்றோர் பெரிதாக நினைக்கின்றனர். ஒரு சில வருடங்களுக்குப் பிறகு, குழந்தைகள் பிறந்து குடும்பம் பெரிதாகி, தேவைகள் அதிகமான பின்புதான் பணத்தின் முக்கியத்துவம் தெரிகிறது” என்றார்.

“எல்லோருக்கும் தெரிந்த பொதுவான கருத்துத்தானே இது” என்றோம்.

“அதைத்தான் நானும் சொல்ல வருகிறேன். மாப்பிள்ளை பிசினஸ் பண்ணுபவராக இருந்தால், பிசினஸில் நிறைய நேரம் செலவிட வேண்டியிருக்கும். அப்போது புதிதாக திருமணமாகி வந்திருக்கும் மனைவியுடன் சேர்ந்து வெளியிடங்களுக்கு செல்வது, பொழுதுபோக்குகளுக்கு நேரம் செலவிடுவது போன்றவைகள் அவருக்கு சிரமமாக இருக்கும். அதனால் சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் கருத்து வேறுபாடு ஏற்படும். அதுவே பின்னால் பெரிய பிரச்சினையாக உருவாக ஒரு அடித்தளமாகி விடும்” என்றார்.

“என்ன கவிஞரே, ஒரு சாதாரண விஷயத்தை மிகவும் பூதாகரமாக கற்பனை செய்கிறீரே?” என்றோம்.

“கற்பனை அல்ல. யதார்த்தமான உண்மை இது. ஒரு சில இடங்களில் இது தீர்க்க முடியாத பிரச்சினையாகி விவாகரத்தில் போய் முடிவது உண்டு. நமக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் நடந்த விஷயம் இது. இதோ இந்தக் கவிதையைப் படித்துப் பாரும்” என்று ஒரு பேப்பரை நீட்டினார். தராசு என்ற தலைப்பில் அவர் எழுதியிருந்த அந்த கவிதை…

தராசு!

கால ஓட்டத்தில்

பொருளாதார தராசு

சான்டி புயலில்

சிக்கியது போல்

சதிராட்டம் ஆடியது

மாமனார் வெயிட்டாக

அவர் தட்டு கீழிறங்கி

தராசுமுள் அவர் பக்கம்.

பணத்துக்கு மயங்காத

மாப்பிள்ளை மீது

பாசம் குறைந்தது

மனவிகாரம் கூடியதால்

மணவாழ்க்கை ஆடியது

விஷயம் முற்றியது

விவகாரமாய் போனது

நீதிமன்ற தராசிடம்

நியாயம் கேட்டது

பண வேற்றுமை

மன வேற்றுமையானது

விவேகம் குறைந்துபோய்

விவாகரத்தில் முடிந்தது.

“அட கடவுளே! மிகவும் பரிதாபமான கதைதான். கவிஞரே, இது நடந்த விஷயம் என்று சொல்கிறீர். ஆனால் நீரும் வியாபாரத்தைத்தானே சிபாரிசு செய்கிறீர்?” என்றோம்.

“நான் சிபாரிசு செய்யும் வியாபாரம் என்பது கணவன் மனைவி இரண்டு பேருமே பங்குதாரர்களாக செயல்படும் ஒரு வியாபாரம். அதனால் இதில் கருத்து வேறுபாடு ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு” ஏன்றார் கவிஞர்.

“கவிஞரே, இதுவரை நீர் எழுதிய கவிதைகளுக்கும், இந்த கவிதைக்கும் அமைப்பில் நிறைய வித்தியாசம் தெரிகிறதே, ஏன் இந்த மாற்றம்?” என்றோம்.

“இப்போது இது போன்ற முறையில் கவிதை சொன்னால்தான் நிறைய பேருக்கு பிடிக்கிறது. அதற்குத் தகுந்தாற்போல் நாமும் மாற வேண்டியது தானே. மாற்றம்தானே முன்னேற்றத்துக்கு அடிப்படை” என்றார்.

எந்த வகை வருமானம் நம்முடையது?

3 நவ்

கவிஞர் கடிவேலு பிசினஸ் விஷயமாக வெளியூரில் இருப்பதாகவும் வருவதற்கு இன்னும் ஒரு வாரம் ஆகுமென்றும் சொன்னார் அல்லவா? அதனால் நேரம் கிடைக்கும் போது நம்மிடம் பேசச் சொல்லிக் கேட்டிருந்தோம். அதை மீண்டும் ஞாபகப் படுத்திக் கொள்ள கீழே உள்ள தலைப்பை சொடுக்கவும்.

கவிஞருடன் நமது உரையாடல் தொடர்கிறது….

கடந்த முறை பேசியதற்குப் பிறகு அவர் நம்முடன் பேசவேயில்லை. நாம் முயற்சித்த போதும் அவருடைய போன் கிடைக்கவில்லை. அதனால் உடனடியாக அடுத்த இடுகையை எழுத முடியவில்லை.

ஆனால் நமது சென்ற இடுகையை படித்து விட்டு, நம்முடைய வருமானத்திற்காக, பிடித்தமான வேலையை செய்யக்கூட  நமக்கு நேரமில்லை என்று நாம் எழுதியிருப்பதைக் குறிப்பிட்டு, அதனால்தான், தான் நெட்வொர்க் பிசினஸை சிபாரிசு செய்வதாகவும், இப்போது நமது வருமானம் ஆக்டிவ் இன்கம் (Active Income) என்ற வகையில் வருவதாகவும், அதற்கு பாதுகாப்பு கிடையாது என்றும் ஈமெயில் அனுப்பியிருந்தார்.

நெட்வொர்க் பிசினஸில் கிடைப்பது பாஸிவ் இன்கம் (Passive Income) என்றும், அதுதான் பாதுகாப்பான வருமானம் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார். ஆக்டிவ் இன்கம் பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்காக ஒரு ஒலி வடிவ உரையையும் அனுப்பியிருந்தார். நாம் அதைக் கேட்டு ஒரு தெளிவான முடிவுக்கு வந்தோம். அந்த ஒலி வடிவ உரையைக் கேட்க கீழே உள்ள பிளேயரில் சிவப்பு பட்டனை சொடுக்கவும்.