இலவச சுற்றுப் பயணமா? அதுவும் லண்டனுக்கு.

1 ஜூன்

ஆபீஸில் வேலையில் மூழ்கியிருக்கும் போது ஏதோ சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தால்….    அட நம்ம கவிஞர் கடிவேலு.

அப்பு வணக்கம்ப்பு….

உற்ற நண்பன் உரைத்ததை உணர்ந்திட்டால்

உற்றதுணையும் சுற்றமும் சுகம்தானே – அல்லால்

சுற்றுலா சென்ற போதும் சுகமில்லை – தலை

சுற்ற சுற்ற அலையும் நிலை அல்லல்தானே

நமது முந்தைய இடுகையை படித்து விட்டு கவிஞர் கடிவேலு எழுதிய கவிதையாம் இது. கவிதையில் குற்றம் குறை ஏதும் இருந்தால் அவரை மன்னித்து விடுங்கள். ஆனால் அவர் சொன்ன இன்னொரு விஷயம் சுவாரசியமாக இருந்தது.

நமது நண்பர் சுற்றுலா சென்ற அதே தினத்தில் அவருடைய நண்பர் ஒருவரும் சுற்றுலா சென்றாராம். எங்கே தெரியுமா?. லண்டனுக்கு…

நான்கு நாள் பயணம். அதுவும் முற்றிலும் இலவசமாக. மிகவும் சந்தோஷமான பயணமாக இருந்ததாம்.

இலவச சுற்றுப் பயணமா? அதுவும் லண்டனுக்கு. கேட்கும்போதே ஆர்வத்தை தூண்டுகிறது. யார் அழைத்துக்கொண்டு போகிறார்கள்? எதற்காக?

ஆர்வத்தை அடக்க முடியாமல் கவிஞரிடம் கேட்டே விட்டேன். அவர் உடனடியாகப் பதில் சொல்லாமல் வரும் ஞாயிறன்று ஒரு இடத்துக்கு அழைத்துக்கொண்டு போகிறேன். அப்போது உங்களுக்கே அது புரியும் என்றார். அடுத்த ஞாயிறு எப்போது வரும் என்று காத்திருக்கிறேன்.

பின்னூட்டமொன்றை இடுக